• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரப் பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் லஞ்சம் தர மறுத்ததால் 10 மாத ஆண் குழந்தை பலி

August 12, 2016 தண்டோரா குழு

வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரைக் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பெற்றோர் லஞ்சம் தர மறுத்ததால், தாமதமாகச் சிகிச்சை அளித்ததில் 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து குழந்தையின் தந்தையும் கூலி தொழிலாளியுமான சிவ்தத் பேசுகையில், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட எனது மகனைக் கடந்த 7ம் தேதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். உள் நோயாளியாகச் சேர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், குழந்தைக்குப் படுக்கை ஒதுக்குவதற்காக நர்ஸும், துப்புரவு தொழிலாளியும் லஞ்சம் கேட்டனர்.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் என்னுடன் சண்டை போட்டனர். பின்னர் நர்ஸுக்கு 100 ரூபாயும், துப்புரவு தொழிலாளிக்கு 30 ரூபாயும் கொடுத்த பிறகு படுக்கை ஒதுக்கினர். இதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கத் தாமதமானதால் எனது மகன் 9ம் தேதி இறந்து விட்டான் என்று கூறினார்.

மேலும், லஞ்சம் கேட்டு தாமதப்படுத்தியதும் முறையான சிகிச்சை அளிக்காததுமே எனது குழந்தை இறந்ததற்குக் காரணம் என்று வேதனையோடு தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் வேகமாகப் பரவியதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாநில சுகாதார அமைச்சர் எஸ்.பி.யாதவ் உத்தரவிட்டார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே லஞ்சம் வாங்கிய நர்ஸ் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஓ.பி.பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க