• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஸ் ஸ்ட்ரைக் எதிரொலி நாய் பிடிக்கும் வண்டியில் பயணம் செய்யும் பொதுமக்கள்

January 11, 2018 தண்டோரா குழு

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுதத்தின் எதிரொலியாக சென்னையில் நாய் பிடிக்கும் வண்டியில் பொதுமக்கள் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனினும், பொதுமக்கள் ஆட்டோ, டாக்சி, சேர் ஆட்டோக்கள், மூலம் பயணம் செய்கின்றனர். ஆனால், அதிலும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுத்துள்ளது.

இந்நிலையில்,சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் பிடிக்கும் வண்டியில் பொதுமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
பஸ் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்ட பொதுமக்கள் நாய் பிடிக்கும் வண்டி என்று கூட பார்க்காமல் அவசர அவசர மாக ஏறி பயணம் செய்கின்றனர். இது தொடர்பான புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க