• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

November 9, 2016 தண்டோரா குழு

ரிசர்வ் வங்கி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, நவம்பர் 9-ம் தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படாது என்றும் இரண்டு நாட்கள் ஏடிஎம் செயல்படாது என்றும் அறிவித்தது.

இந்திய நாட்டு மக்களின் முக்கிய பிரச்னையாகத் தற்போது இருப்பது 500 ரூபாய், 1000 ரூபாய் பிரச்னை. கையிருப்பில் உள்ள பழைய நோட்டுக்களை எப்போது, எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே பலருக்கு படபடப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளை நாடுவார்கள். இதனால் வங்கிகளில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டும் எனவும் அறிவித்துள்ளது

மேலும் படிக்க