• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

August 18, 2016 தண்டோரா குழு

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை நோக்கிக் கடந்த 14ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது.அப்போது விமானம் இந்திய வான் பகுதியை நெருங்கிய நேரத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணியும் நிறைமாத கர்ப்பிணியுமான டியான்னே(32) என்பவருக்குப் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் மருத்துவ உதவித் தேவைப்படுகிறது என்னும் செய்தியை அறிந்த சுமவான் மற்றும் ஜென்னிபர் என்னும் இரண்டு செவிலியர் உடனே உதவிக்கு வந்துள்ளனர்.அவர்களுடைய உதவியால் டியான்னேவிற்கு விமானத்திலேயே ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்து உள்ளனர்.

விமானத்தின் ஓட்டுனர், கேப்டன் ப்ராடோ விமானத்தை பாங்காக் நகரில் விமானத்தை தரையிறக்க நினைத்தாகவும் ஆனால் அங்குச் செல்ல சுமார் 2 மணிநேரம் என்பதால் சுமார் 45 நிமிடத்தில் ஹைதராபாத் நகரம் இருப்பதால் அங்குச் செல்வது தான் சரியானது என்று அங்கே விமானத்தை தரையிறக்கம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் பிறக்க இருந்த குழந்தை அதன் முன்பே பிறந்துவிட்டது.தாயையும் குழந்தையையும் உடன் இருந்த பயணிகள் நான்கு கவனித்து கொண்டனர்.குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தை என்பதால் தாயையும் குழந்தையையும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

செபு பாக் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் ஆயுசு முழுவதும் அதில் இலவச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பு சலுகை அந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க