• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த கருவின் மூலம் பிறந்த குழந்தை

December 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் சுமார் 25 ஆண்டுகள், உறைநிலையில் இருந்த கரு மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டினா கிப்சன் மற்றும் பெஞ்சமீன் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன.குழந்தை இல்லாத அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தை பிறப்பின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த குழந்தை சுமார் 25 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் பிறந்தது தான்.

டீனாவின் கணவர் பெஞ்சமின் “Cystic fibrosis” என்னும் நோயால் பாதிக்கபட்டிருந்தார். இந்த நோயின் பாதிப்பால் பெஞ்சமின் தம்பதினருக்கு குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் அநாதை குழந்தைகளை வளர்த்து வந்தனர். இருப்பினும், தங்களுக்கு என்று சொந்த குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில்,அந்த தம்பதியினர் மருத்துவர்களின் உதவியை நாடினர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சுமார் 25 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவை IVF சிகிச்சை முறை மூலம், டீனாவின் கருப்பையில் வைத்தனர். அதன்பிறகு, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு எம்மா என்று பெயர் வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு நியூயார்க்கில் 20 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க