• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் சுதந்திர தின விழா உரையின்போது தூங்கி வழிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

August 15, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகரான புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

வி.ஐ.பி.க்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ’தூங்கும் அளவுக்குப் பிரதமரின் பேச்சு போர் அடித்திருக்கக்கூடும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க