• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரொக்கப் பணப் புழக்கம் அதிக அளவில் இருக்காது – அருண் ஜேட்லி

December 2, 2016 தண்டோரா குழு

வரும்காலங்களில் நாட்டில் ரொக்கப் பணப் புழக்கம் அதிக அளவில் இருக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பினர்.

ரொக்கமாகப் பணத்தைச் செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறிவரும் இந்நிலையில், கறுப்புப் பண ஒழிப்பைத் தாண்டி ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி முன்னேறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது நடவடிக்கையால், அந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரொக்கப் பணப் புழக்கம் இனி நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு இருந்ததுபோல் வரும் காலங்களில் இருக்காது. அதே வேளையில் வர்த்தகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. மத்திய அரசின் நடவடிக்கையால் வர்த்தகம் வளரும். ரொக்கப் பணப் புழக்கம் குறையும். தற்போது நிலவிவரும் பணத் தட்டுப்பாடு வரும் 31-ம் தேதிக்குள் சீராகிவிடும் என்றார் அருண் ஜேட்லி.

மேலும் படிக்க