November 1, 2018 தண்டோரா குழு
அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்த போது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார் என அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அப்போது தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்,01.10.16 அன்று,மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவை பார்த்தார்.இது தொடர்பாக,06.10.2016 ல் குடியரசுத் தலைவருக்கு,ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்த போது, அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார்.உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.அவ்வப்போது,ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன் எனக் கூறப்பட்டுள்ளது.