• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உணவுக்காக 6 வயது மகளை 55 வயது ஆணுக்குத் திருமணம் செய்து வைத்த தந்தை

August 10, 2016 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தானில் உணவுக்காகத் தனது 6 வயது மகளை 55 வயது ஆணுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கோர்ஸ் மாகாணத்தில் உள்ள பிரோஸ்கோ என்னும் இடத்தில் ஆடு மற்றும் சில உணவுகளுக்காகத் தனது 6 வயது மகளை 55 வயது ஆணுக்கு அவரது தந்தையே திருமணம் செய்து வைத்துள்ளார். கரிப்கோல் எனும் 6 வயது சிறுமியை சையத் அப்துல் கரீம் எனும் 55 வயது ஆணுக்குச் சிறுமியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இத்திருமணத்திற்கு ஈடாக ஆடு, அரிசி, டீ தூள், எண்ணெய் மற்றும் சர்க்கரையை அவர் பெற்றுள்ளார்.சிறுமியின் உறவினர் திருமணம் நடந்தை அறிந்து சில மணி நேரங்களில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவரது தந்தையும், மணம் செய்து கொண்ட சையத் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தனது குடும்பத்திற்கு உணவு அளிக்க முடியாத காரணத்தினால் தான் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தை கூறியுள்ளார். மேலும், சிறுமி 18 வயதை எட்டிய பிறகே, 55 வயது சையத் உடலுறவு கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற சையத், அன்று இரவு சிறுமியின் ஆடைகளைக் களைய முயற்சித்ததாக சில சாட்சியங்கள் கூறுகின்றன. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி தற்போது அவரது தாயிடம் பத்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க