• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டார் ஃபரூக் அப்துல்லா.

May 30, 2016 தண்டோரா குழு

நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த சமயத்தில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்பு விழாவின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த ஃபரூக் அப்துல்லா எழுந்து நின்று கொண்டு தனது கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பித்துவிட்டார்.

இதைக் கண்ட சக நண்பர்கள் அப்துல்லாவின் செயலைக் கண்டித்துள்ளனர். இது வருந்தத் தக்க செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை என்றும். தன்னுடைய செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும் படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் எப்பொழுதும் இந்தியாவின் பக்கம் பேசுவதாகவும், ஆதரிப்பதாகவும், பலரும் தன்னை குற்றம் சாட்டியிருக்கிறனர். அவ்வாறிருக்கத் தன்னை இவ்வாறு அவதூறு கூறுவது எந்தவிதத்திலும் பொருந்தாது என்று கூறியுள்ளார்.

அப்துல்லா அவர்கள் பிரிவினைவாதிகளுடன் தேசிய கீதத்தைப் பற்றிப் பேசியிருக்கக்கூடும் என்று பி.ஜே.பி தலைவர் ஷைனா கூறியுள்ளார்.

தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் அவமதிப்பது நாட்டையே அவமதிப்பதாகும். ஒவ்வொரு பிரஜையும் ஆர்டிகிள் 51 ஏ (எ) சட்டப்படி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதிப்பது அவசியம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இரு பத்திரிகையாளர்களை தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத காரணத்திற்காக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை வெளியேற்றிய சம்பவம் நினைவிருக்கலாம்.

மேலும் படிக்க