• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகையை அழைத்ததால் கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட சங்கடம்

June 25, 2016 தண்டோரா குழு

யோகா தினம் ஜூன் 21ம் தேதி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தேதியில் ஒவ்வொரு தலைவரும் அவரவர் மாநிலத்தில் திறம்பட நடத்தினர். ஒவ்வொரு பள்ளியிலும் இந்நிகழ்ச்சியைக் நடத்திக்காட்டி கொண்டாடினர்.

அவ்வண்ணம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையையாவும் யோகா நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினார். மக்கள் பலரும் அதில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

முக்கிய விருந்தாளியாக பாலிவுட் நடிகையான பிபாஷா பாசுவும் முதலமைச்சர் சித்தராமையாவுடன் மேடையில் அமர்ந்து பல ஆசனங்களையும் செய்து விழாவிற்கு மெருகூட்டி வந்தார். இவை அனைத்தும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.

நடிகை பிபாஷா பாசு யோகாவில் தேர்ச்சி பெற்றவர். தினமும் பயிற்சி செய்வதோடு மற்ற சகநடிகைகளுக்கும் கற்றுத் தருவது அவரது வழக்கம்.

இந்நிலையில் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது கர்னாடக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த நடிகைக்கு 1.5 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வந்து போவதுக்கு விமானச் செலவு போன்றவற்றை அரசு செலவழித்தென்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதிக்கும் அரசு கணக்கில் இருந்து செலவளிக்கப்பட்டுள்ளது என்றும் பல குற்றச்சாட்டுகளை பிற அமைப்பினர் முன்வைக்கின்றனர்.

அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு வரும் ஒரு நபர் அந்நிகழ்ச்சிக்கு பணம் வாங்குவது தவறு. இது போன்ற நிகழ்ச்சிக்கு இத்தகைய நபரைத் தேர்ந்தெடுத்தது அரசின் மிகப் பெரிய தவறு என குற்றம் சுமத்தும் அவர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர். இத்தொகையை ஏதேனும் ஒரு ஆக்கப்பூர்வமான செயலுக்குச் செலவழித்திருக்கலாம் என்றும் பலர் விமரிசித்துள்ளனர்.

மேலும் படிக்க