• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி கைது

September 22, 2016 தண்டோரா குழு

டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் சோம்நாத் பாரதியும் அவரது ஆதரவாளர்களும் நுழைந்தனர். நிர்வாகத்தின் அனுமதியின்றி எய்ம்ஸ் வளாகத்தின் பாதுகாப்பு வேலி மற்றும் சுற்று சுவரை ஜெ.சி.பி., எந்திரத்தை கொண்டு சேதப்படுத்தினர். இதை தடுக்க சென்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாவலர்களிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்தநிலையில், இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் சோம்நாத் பார்தி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க