• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

92 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ஆதார் விவரம் பதிவு

December 21, 2016 தண்டோரா குழு

92 லட்சம் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் நியாய விலை கடைகள் மூலம் பதியப்பட்டன என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

ரே‌ஷன் கார்டுகளுக்குப் பதிலாக “ஸ்மார்ட் கார்டு” வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

போலி ரே‌ஷன் கார்டுகளை ஒழிக்க ஸ்மார்ட் கார்டு உருவாக்கப்பட உள்ளதால் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ரே‌ஷன் கார்டுடன் இணைக்கும் பணி ரே‌ஷன் கடைகளில் நடைபெற்று வந்தது. இந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லை.

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழ்நாட்டில் 2 கோடியே 3 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. ரே‌ஷன் கார்டுகளுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்டு தேய்க்கும் இயந்திரத்தில் தேய்க்கும் விதமாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ரே‌ஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின், ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தும் நியாய விலை கடைகள் மூலம் பதியப்பட்டு வந்தன. இதில் 92 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு ஆதார் கார்டு வைத்திருப்போரின் இணைப்பு கிடைத்து விட்டது.

ஆனால், 80 லட்சம் கார்டுகளுக்கு ஆதார் முழு விவரம் கிடைக்கவில்லை. இதில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஓரிரு பேருக்கு மட்டுமே விவரங்கள் பதிவாகியுள்ளன. இதனால், மீண்டும் கள ஆய்வு கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் பிறகுதான் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

2௦17 ம் ஆண்டுக்கான ரே‌ஷன் பொருட்கள் வாங்குவதற்கு ரே‌ஷன் கார்டில் உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க