• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

February 5, 2019 தண்டோரா குழு

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அடுத்த பட்டினம்பக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ் (எ) தேவராஜ் (55). இவர் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 20 நாட்கள் கழிந்த நிலையில் சிறுமிக்கு மீண்டும் தேவராஜ் பாலியல் தொந்தரவு கொடுக்க, இதனை சிறுமி தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகோதரி பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் தேவராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க