• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

9 லட்ச லிட்டர் மதுவை எலிகள் தான் குடித்ததாம் – பீகார் போலீஸ் திடுக்

May 5, 2017 தண்டோரா குழு

பீகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்ச லிட்டர் மதுபானங்களை எலிகள் காலி செய்துவிட்டது என்று பீகார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்செய்யப்பட்ட பிறகு 9 லட்ச லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் பீகார் காவல்நிலையத்திலுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த மதுபான பாட்டில்கள் காணாமல் போய்விட்டதாக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியாகியது.பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் உடைக்கப்பட்டிருந்தது.

அதிலிருந்த மதுவை எலிகள் குடித்துவிட்டன என்று சமீபத்தில் பீகாரில் நடந்த மாநில காவல்துறை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுக்குறித்து கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.கே.சிங்கல் கூறுகையில்,

“இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்னா மண்டல ஐ.ஜிக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய விசாரணைக்கு பிறகு, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க