• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

735 கிலோ குட்கா பறிமுதல் ராஜஸ்தான் இளைஞர் உட்பட 4 பேர் கைது

March 17, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் போலீஸாரால் 735 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இது தொடர்பாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் சூலூர் ரயில்வே பீடர் ரோட்டிற்கு விரைந்து சென்று குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாதரம்(31), அரசூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (48)* மற்றும் சூலூர் பகுதியை ராஜா (52) ஆகிய நபர்களை கைது செய்து 735 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக அவர்கள் தப்ப முயன்ற போது போலீஸார் அவர்களை அனைத்து பக்கமும் சுற்று வளைத்து துரத்தி பிடித்தனர்.

மேலும் படிக்க