July 30, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி சிறு நிதி வங்கிகளில் ஒன்றான உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, 2026-ஆம் ஆண்டில் ‘இந்தியாவில் வேலை செய்வதற்குச் சிறந்த முதல் 100 நிறுவனங்கள்’ பட்டியலில் 8-வது இடம் பிடித்துள்ளது.
இதன் மூலம், முந்தைய ஆண்டை விட மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, நாட்டின் மிகச் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகத் தனது இடத்தை இந்த வங்கி உறுதி செய்துள்ளது.இந்தச் சாதனையோடு சேர்த்து உஜ்ஜீவன் வங்கியானது வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறையின் வேலை செய்வதற்குச் சிறந்த முதல் 25 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
மேலும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் சிறந்த முதல் 10 பணியிடங்கள் பட்டியலிலும் உள்ளது. ஊழியர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும், சிறப்பாகச் செயல்படவும் ஏற்ற சிறந்த சூழலை அமைத்துக் கொடுப்பதில் வங்கியின் ஈடுபாட்டை இது காட்டுகிறது.
உஜ்ஜீவன் வங்கியைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் என்பது வெறும் தரவரிசை மட்டுமல்ல; இது அவர்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் அடையாளமாகும். எளிதில் அணுகக்கூடிய தலைமை, ஊழியர்களின் நல்வாழ்வு, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், புதுமை மற்றும் ஊழியர்களின் கருத்துக்களுக்கு அதிக மதிப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் வங்கி தனது பணி கலாச்சாரத்தை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.இதன் விளைவாக, ஆண்டுதோறும் ஊழியர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் ஒரு பணியிடமாக உஜ்ஜீவன் திகழ்கிறது.தொடர்ந்து 16 ஆண்டுகளாக ‘கிரேட் பிளேஸ் டு ஒர்க்’ அங்கீகாரத்தை உஜ்ஜீவன் வங்கி பெற்று வருவது, ஊழியர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
இதுகுறித்து உஜ்ஜீவன் வங்கியின் மனிதவளத் துறைத் தலைவர் சந்திரலேகா சௌதுரி கூறுகையில்:
“ஊழியர்களின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பது எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாகும். எங்கள் ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், எங்களின் பணி கலாச்சாரம் குறித்த அவர்களின் உண்மையான மதிப்பீட்டையும் இந்தத் தரவரிசை காட்டுகிறது. இது ஒரு சிறந்த பணியிடத்திற்கான உண்மையான அளவுகோலாகும். இந்தச் சாதனைக்குக் காரணமான ஒவ்வொரு உஜ்ஜீவன் வங்கி ஊழியரின் பங்களிப்பிற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
உஜ்ஜீவன் வங்கியின் தரவரிசை முன்னேற்றமானது, 2025-26 நிதியாண்டில் கீழ்க்கண்டவைகளை அடிப்படையாகக் கொண்ட அதன் சிறந்த பணி கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது:வளர்ச்சி மற்றும் தொடர் கற்றலை ஊக்குவித்தல்: முறையான பயிற்சித் திட்டங்கள், தலைமைத்துவப் பயிற்சிகள் மற்றும் டிஜிட்டல் வழி கற்றல் மூலம் ஊழியர்களின் மேம்பாட்டிற்காக வங்கி தொடர்ந்து முதலீடு செய்கிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் 48 மணிநேரத்திற்கும் மேலான கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
99 சதவீத ஊழியர்கள் கற்றல் மேலாண்மை அமைப்பை பயன்படுத்திப் பயனடைந்து வருகின்றனர்.தற்போது இந்தியா முழுவதும் உஜ்ஜீவன் வங்கியில் 26,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஊழியர்கள் தாங்கள் வளரவும், புதிய விஷயங்களை உருவாக்கவும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த பணி கலாச்சாரத்தை உஜ்ஜீவன் வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.