• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

73 வயது மூதாட்டியை மணந்த 15 வயது சிறுவன்!

July 7, 2017 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் 15 வயது சிறுவன் 73 வயது மூதாட்டியை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15) மலேரியா காய்ச்சலில் அவதிப்பட்ட போது அவன் வீட்டின் அருகில் வசிக்கும் 73 வயதான மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார் அவனை நல்ல முறையில் கவனித்துக்கொண்டார்.

இதனால், அந்த மூதாட்டி மீது அதிக அன்புக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்.இந்த அன்பு நாளடைவில் காதலாக மாறியது.இதனால் அந்த மூதாட்டியை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினான்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் தங்களுடைய திருமணத்தை நிறுத்தினால், இருவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களுடைய திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரங் எந்தா என்னும் இடத்தில் நடந்ததுள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் சிக் அனி கூறுகையில்,

“ரியாடியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, இருவரும் தற்கொலை செய்துகொள்வாம் என்று மிரட்டியதால், அவர்களுடைய திருமணத்தை நடத்தினோம். அந்த சிறுவனுடைய தந்தை இறந்த பிறகு, அவனுடைய தாய் மறுமணம் செய்துக்கொண்டார். அவனை கவனிக்க யாருமில்லை. ரோஹாயா இதற்கு முன் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது. அவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறான். ஒருவரையொருவர் அதிகமாக நேசிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும் படிக்க