• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

3 கால்களுடன் பிறந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

May 3, 2017 தண்டோரா குழு

வங்கதேசத்தில் மூன்று கால்களுடன் பிறந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்னும் 3 வயது சிறுமி மூன்று கால்களுடன் பிறந்தாள்.தற்போது அந்தச்சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம், மூன்றாவது காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.

மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், கிரிஸ் கிம்பர் கூறுகையில்,

“சோய்டி ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, ஊட்ட சத்து குறைப்பாடு இருந்தது. அவளாள் சரியாக நடக்கக் கூடி முடியவில்லை. மூன்றாவது காலின் ஒரு பகுதியை வங்கதேச மருத்துவர்கள் ஏற்கனவே எடுத்துவிட்டனர். மற்ற பாகத்தை எடுப்பது குறித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே, மிகுந்த கவனத்தோடு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய கண்பார்வையின் ஒரு பகுதியை இழந்து விட்டாள். அதை சரி செய்ய முடியாது என்று அவளை பரிசோதித்த கண் மருத்துவர் தெரிவித்துளார்” என்றார்.

சிறுமியின் உடலிலிருந்து மூன்றாம் கால் எஞ்சிய பகுதியை எடுத்த மருத்துவ குழுவினர், அவள் வீடு திரும்பிய பிறகு அவளுடைய உறுப்புக்கள் இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் விதமாக மறுகட்டமைப்பு சிகிச்சையை மேற்கொண்டனர்.

அவளுடைய தாய் கூறுகையில்,

“இப்போது அனைத்தும் நன்றாக இருக்கிறது. என் மகளால் மற்ற குழந்தைகளை போல் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க