• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலையில் கிறிஸ்மஸ் குடில் உருவாக்கி யு.எம்.டி.ராஜா

December 18, 2020 தண்டோரா குழு

250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலையில் கிறிஸ்மஸ் குடில் ஐந்து சிறிய மான்கள் கிறிஸ்மஸ் தாத்தா வாகனத்தில் அழைத்துச் செல்வது போன்ற சிறிய சிற்பத்தை கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா உருவாக்கியுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. பண்டிகை மற்றும் குடியரசு,சுதந்திர தின நாட்களில் சிறிய அளவிலான பல்வேறு விதமான ஓவியம் மற்றும் கலைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான இவர் இதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வரவேற்கும் விதமாகவும் விழாவை கொண்டாடும் விதமாகவும் 250 மில்லி கிராம் தங்கத்தில் ஐந்து சிறிய மான்கள் கிறிஸ்மஸ் தாத்தா வாகனத்தில் அழைத்துச் செல்வது போலவும் கிறிஸ்துமஸ் குடில் அதில் இயேசுவும் சிறிய சிறிய உருவமும் செதுக்கி, கிறிஸ்மஸ் ட்ரீ பனிமலை போன்ற ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

பொதுமக்களிடம் நாட்டுப்பற்று மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் இது போன்று சிற்பங்களை உருவாக்கி வருவதாகவும், அது போன்று இந்த வருடம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க