• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு வங்க ரயில் விபத்தில் 2 பலி, 6 காயம்

December 7, 2016 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) ரயில் தடம்புரண்டதால் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படு காயமடைந்தனர்.

இது குறித்து வட கிழக்கு எல்லைப்புற ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் (சிபிஆர்ஓ) பிரணவ் ஜோதி சர்மா செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:

விரைவு ரயில் பிகார் மாநிலம் பாட்னாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் குவாஹத்திக்குச் சென்று கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் தடம்புரண்டது. அதில் இருவர் இறந்தனர். ஆறு பேர் படு காயமடைந்தனர். சில வாரங்களுக்கு முன் நடந்த ரயில் விபத்தில் 150 பேர் இறந்தனர்.

அலிபுர்தார் மாவட்டத்தில் உள்ள சமுக்டாலா ரோடு நிலையத்தில் ராஜேந்திர நகர் குவாதி கேபிடல் எக்ஸ்பிரஸ் தரம் புரண்டது. அம்மாவட்டத்தின் ரயில்வே பிரிவு தலைமையகத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமுக்டாலா ரோடு நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அடையாளம் தெரியாத இரண்டு ஆண் சடலங்களும் காயமடைந்த ஆறு பேர் தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்திரஜித் மண்டல், 25, பரீட்சித் மண்டல், 40, ப்ரீதம் மண்டல்,16, ரூபா மண்டல், 34, ஷா ஜமால் ஷேக், 35, சுரேந்திர பிரசாத், 38 காயம் அடைந்தவர்கள் ஆவர். இறந்தவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே மருத்துவர்கள் விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதிக்கப்படாத 19 ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டன. ரயில் புதன்கிழமை காலை 5.10 மணியளவில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறுகிய கால நேரத்திற்கு இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தைத் தொடர்ந்து எட்டு ரயில்கள் திருப்பி விடப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க