• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிப்பு !

September 20, 2017 தண்டோரா குழு

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ 1,76, 000 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.மேலும் வழக்கின் முக்கிய ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் தீர்ப்பின் தேதி செப்டம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க