• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16 ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் – பவுண்டரி அதிபர்கள் சங்கம் அறிவிப்பு

December 14, 2020

மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வருகின்ற 16 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

கோவை மாவட்டத்தில் 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, வருகின்ற 16 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார்,

மூலப்பொருட்கள் விலையேற்றத்தினால் பவுண்டரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மூலப்பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும்,செயற்கையாக மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படுமெனவும், இத்தொழிலை சார்ந்துள்ள 2 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இத்தொழிலை சார்ந்து இயங்கி வரும் வெட் கிரைண்டர், இன்ஜினீரிங், மோட்டர் பம்புகள், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க