• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செம்மரக்கட்டை விவகாரம் மேலும் 15 பேர் திருப்பதி அருகே கைது

August 11, 2016 தண்டோரா குழு

உலகிலேயே மிகவும் உறுதியான மரம் என மதிக்கப்படும் செம்மரம், திருப்பதி வனப்பகுதியில் அதிகளவில் நடவு செய்யப்பட்டு வளர்ந்து நிற்கிறது. இவற்றைச் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி வரும் கும்பல் அதற்காகத் தமிழகத்தில் உள்ள மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களைக் குறிவைத்து அழைத்துச் செல்கிறது.

இதனால் அவர்கள் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி வழியாக ரயிலில் சென்ற ஒரே குற்றத்திற்காக 32 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியும் அவர் மறுத்துள்ள நிலையில், இன்று மீண்டும், திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த திருச்சியை சேர்ந்த 9 பேர் உள்பட 15 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

திருப்பதி அடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வர விலங்கியியல் பூங்கா பின்புறம் உள்ள திம்மநாயுடு பாளையம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புபிரிவு எஸ்.ஐ. வாசு தலைமையில் அதிகாரிகள் இன்று காலை ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சட்டவிரோதமாக செம்மரம் கடத்த வந்தவர்கள் எனத் தெரிந்ததை அடுத்து அனைவரையும் கைது செய்தனர்.

அவர்கள் திருச்சி மாவட்டம் வாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், அங்கமுத்து, மூர்த்தி, நாகராஜ், பெருமாள், துரையூரைச் சேர்ந்த சக்திவேல், ராமு, ரவி, திருச்சியைச் சேர்ந்த சண்முகம், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சிவா ஆகியோர் எனக் கண்டுபிடித்தனர்.

மேலும், இவர்கள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களை அவர்கள் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய மூவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க