• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிற் சங்கங்கள்

May 5, 2017 தண்டோரா குழு

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ஊதிய ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தயார்படுத்தும் வகையில் வரும் 9-ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்தப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் இப்போராட்டத்தால் 90 சதவிகித பேருந்துகள் இயங்காது.

போக்குரவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முடிவு, ” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க