• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 நாள் வேலைக்கு ஆதார் எண் கட்டாயம்

January 9, 2017 தண்டோரா குழு

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லதாவர்கள், அதைப் பெறும் வரை ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாயிகள் வங்கி சேமிப்புப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாகக் காண்பிக்கலாம்.

பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என மத்திய தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க