• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 நாட்களில் 40 யானைகள் பலி !

December 14, 2017 தண்டோரா குழு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகையால் மனிதனின் தேவைக்கு ஏற்ப காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் ஊருக்கு வருகின்றன. அப்படி ஊருக்குள் வரும் போது மனித விலங்கு மோதல் ஏற்படுகின்றது. அந்த வகையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகிறது.

இதனால், யானைகள் தங்களுடைய உணவு மற்றும் நீர்த் தேவைக்காக மனிதர்களின் இருப்பிடத்திற்கு வந்து விடுகின்றன. அப்படி ஊருக்குள் வரும் யானைகள் அனைத்தும் ரயிலில் அடிபட்டும், தேயிலை தோட்டங்களில் உள்ள குழிகளில் சிக்கியும், மின்சார வேலியில் மின்சாரம் பாய்ந்தும் உயிரை இழந்துள்ளன. அதன்படி கடந்த 100 நாட்களில் மட்டும் 40 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபுறம் விளைநிலங்களை சேதப்படுத்துவது குடியிருப்பு பகுதிகளை தாக்குவது போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் யானைகள் இறப்பு குறித்து கவலை கொள்வதில்லை மறுபுறம் காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் இறப்பிற்கு அக்கறை எடுத்துக் கொள்ளும் அரசு, யானைகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது இல்லை. என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க