• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவனக்குறைவால் பறிபோன 1.2 லட்சம்

July 28, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். ராணுவ வீரரான இவர் சொந்த வேலைக்காக எடுத்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைத் தனது இருசக்கர வைத்துப் பூட்டிவிட்டு ராணிப்பேட்டை பி.எச்.இ.எல் பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த வண்டியின் பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ராணிப்பேட்டை பி.எச்.இ.எல் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது வேலைக்குச் செல்லும்போது பணத்தையும் கூடவே எடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சனை இருந்திருக்காது எனக் காவலர்கள் தெரிவித்தனர்.மேலும் பெட்டி உடைக்கப்பட்டுள்ளதா அல்லது வரும் வழியில் பெட்டி தானாகத் திறந்து விழுந்துவிட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க