• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவனக்குறைவால் பறிபோன 1.2 லட்சம்

July 28, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். ராணுவ வீரரான இவர் சொந்த வேலைக்காக எடுத்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைத் தனது இருசக்கர வைத்துப் பூட்டிவிட்டு ராணிப்பேட்டை பி.எச்.இ.எல் பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த வண்டியின் பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ராணிப்பேட்டை பி.எச்.இ.எல் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது வேலைக்குச் செல்லும்போது பணத்தையும் கூடவே எடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சனை இருந்திருக்காது எனக் காவலர்கள் தெரிவித்தனர்.மேலும் பெட்டி உடைக்கப்பட்டுள்ளதா அல்லது வரும் வழியில் பெட்டி தானாகத் திறந்து விழுந்துவிட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க