• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்

April 11, 2017 தண்டோரா குழு

புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டம் 1988, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக திங்கட்கிழமை(ஏப்.,10) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் படி, வாகன விபத்துக்களில் உயிரிழப்போர் குடும்பத்துக்குப் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அபராதம்:

புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.

ஆதார் கட்டாயம்:

சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க