• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்

December 16, 2020 தண்டோரா குழு

மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாவது நாளாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் 2020 மின்சார சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கோவை மாவட்டம் கணியூரில் உள்ள சுங்கச்சாவடியில்அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் 2020 மின் சட்டத்தை எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர் முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் படிக்க