• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“வேறு இடத்தில் எதற்கு அரசு அலுவலகங்கிலேயே டாஸ்மாக் கடையை திறங்கள்” மாவட்ட ஆட்சியரிடம் மனு

April 13, 2017 தண்டோரா குழு

டாஸ்மாக் கடையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களில் திறக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 154 கடைகளை மாற்று இடங்களில் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் கடைகளை திறக்க கடும் எதிர்ப்புகளை தெரிவித்துபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிழவி வருகின்றது.

இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் பொதுநல அமைப்புகள், பத்திரிகையாளர் சங்கங்கள், சமூக அமைப்புகள் என பல அமைப்புகள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், “ ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டுமென்றும், ஏனென்றால் ஏதாவது ஒரு வேலைக்காக தினசரி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதால் டாஸ்மாக் கடைகள் இருந்தால் நல்லது என்கின்றனர்.

ஆகையால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடைகளை திறக்கும் அதிகாரிகள் ஏன் அரசு அலுவலகங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது.” என மனுவில் குறிபிட்டுள்ளனர்.

மேலும் படிக்க