• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெப்பநிலை அதிகரித்து காணப்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

April 18, 2017 தண்டோரா குழு

வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது, அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“ மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் தான் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வடதமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் 5 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும். வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.” என்றார் அவர்.

மேலும் படிக்க