• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகள் பிரச்சனை, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் – ராகுல்காந்தி

March 31, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவராணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் 18 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். பின்னர் விவசாயிகளிடம் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் “ பிரதமர் மோடி தலமையிலான அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. நாட்டில் பணக்காரரகள் அதிகம் உள்ளனர் . அவர்கள் நலனையே பிரதமர் மோடி பார்க்கிறார்.

ஏழை விவசாயிகள் பற்றி நினைப்பதில்லை. விவசாயிகளை அவமதிப்பது ஏன் ? விவசாயிகளுக்கு பிரதமர் ஓரவஞ்சனை செய்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.” என்றார் ராகுல்காந்தி.

மேலும் படிக்க