February 17, 2020
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பல ஆண்டுகளாக இலவச மின் சாரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆள்பற்றாகுறை ,உரம் ,பூச்சி மருந்துகள் விலை ஏற்றம் ,தட்வெட்ப நிலை மாற்றம், நீர் பற்றாகுறை போன்ற காரணங்களால் விவசாயம் நாளுக்கு நாள் விவசாய உற்பத்தி குறைந்து வரும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போர்வெல் அமைத்து விவசாயம் செய்ய மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய விவசாயிகள், கடந்த காலங்களில் இலவச மின்சாரம் தந்துவந்த நிலையில் மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மாற்றி 10 ஆயிரம்,25 ஆயிரம் ,50 ஆயிரம் திட்டம் என்பதை அறிவித்து இலவச மின்சாரம் இணைப்பு வழங்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருவதாகவும் எனவே வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கூறி கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மின் இணைப்பு பெட்டிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.