• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்

March 30, 2017 தண்டோரா குழு

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகளுக்கு போதிய நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராடிய மாணவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்க