• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் கொழும்பு- வாரணாசி இடையே விமான சேவை-மோடி

May 12, 2017 தண்டோரா குழு

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்ப்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

இலங்கையில் கொழும்பு பண்டார நாயக ஹாலில் சர்வதேச புத்தபூர்ணிமா கொண்டாட்டம் (வெசாக் தின கொண்டாட்டம்) நடைபெற்றது.இதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது,

புத்தரின் புனித நிலமான இலங்கை தலைநகர் கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். விரைவில் ஏர் இந்தியா விமானம் சார்பில் வாரணாசியில் இருந்து கொழும்புவிற்கு விமானச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், அந்த சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்றார். இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இதனைத்தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே புத்த பூர்ணிமா விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு அவர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க