• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விராத் கோலி தான் அதற்கு பதில் கூற வேண்டும் – ஸ்மித்

March 30, 2017 தண்டோரா குழு

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டனர்.

அப்போது, ஆஸ்திரேலிய அணியில் குறிப்பாக இரு வீரர்களுடன், நண்பர்களாக இருக்க முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார். இதற்காக ஆஸ்திரேலியா ஊடகங்கள் விராத் கோலியை விமர்சனம் செய்தது.

இதற்கிடையில், நடைபெறவுள்ள 10வது ஐபிஎல் போட்டியில் புனே அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக களமிறங்குகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக, புனே அணியின் சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கோலி கூறிய கருத்து குறித்து ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்மித், விராத் கோலி என் பெயரைக் குறிப்பிட்டிருப்பாரா என்பது குறித்து தெரியாது. இந்த கேள்விக்கு விராத் கோலிதான் பதில் கூற வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க