• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரலில் மை வைக்க புதிய பேனா தயாரிப்பு

July 11, 2017 தண்டோரா குழு

தேர்தலில் வாக்களித்தவர்கள் விரலில் மை வைக்க புதிய பேனா தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்(MPVL) நிறுவனம், தேர்தலில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை பல ஆண்டுகளாக தயாரித்து விநியோகம் செய்து வருகிறது.

தற்போது விரலில் மை வைக்க புதிய பேனா தயாரிக்கப்பட்டு, ஜூலை 17ம் தேதி நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் இது பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பெயரில், இந்த பேனாவை தயாரிக்க தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி கார்ப்பரேஷன் மற்றும் தேசிய ரசாயன ஆய்வகம் ஆகியவற்றின் ஆதரவுடன் MPVL நிறுவனம் இந்த பேனாவை தயாரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்பட்ட பாட்டில் மைகளுக்கு பதிலாக பேனாவை பயன்படுத்தப்படும்போது, சுமார் 5௦ சதவீத செலவு மிச்சப்படுத்தபடும் என்றும் சுமார் 1௦௦௦ வாக்காளர்கள் கையில் மை வைக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க