February 5, 2020
போடி பாளையம் அருகே நேற்று இரவு வேகமாக வந்த இரு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் போடிபாளையத்தை சேர்ந்த பூபால் என்பவரும், பச்சபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் பாதிக்கப்பட்டனர். அப்போது அந்த வழியாக போடிபாளையத்திலிருந்து மதுக்கரை வந்து கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விபத்து நடந்த இடத்தில் தனது காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடி சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.