• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் ஆப்பில் வந்த கோரிக்கையை ஏற்று வேகத்தடைக்கு வண்ணம் பூசிய போக்குவரத்து காவல்துறையினர்

November 25, 2016 தண்டோரா குழு

நம்ம கோவை வாட்ஸ் ஆப்பில் வந்த கோரிக்கையை ஏற்று வேகதடைக்கு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வண்ணம் பூசினர்.

கோவை மாவட்டத்தின் நலம்விரும்பிகள் ஒன்றாக சேர்ந்து “நம்ம கோவை” என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளனர்.இதில் நேற்று(24.11.2016) காலை 10 மணியளவில் சதீஷ் என்பவர் கோவை மாநகர் சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையானது சட்டென்று அடையாளம் காணமுடியாத நிலையில் உ‌ள்ளதாகவு‌ம்,இதனால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் படத்துடன் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சரணவன் சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழைத்து தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு வேகத்தடைக்கு காவலர்களைக் கொண்டு வர்ணம் பூசப்பட்டு மாலை 6 மணிக்கு அழைத்து ஒளிரும் பிரதிபலிப்பான் (Cats Eye) பொருத்தப்பட்டது.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சரணவன் கூறுகையில்,

கோவை மாநகரத்தில் எப்படியாவது விபத்துகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று எண்ணும் உதவி கமிஷனர் மகுடபதி, ஆய்வாளர் அய்யர்சாமி, சதாசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கிடைக்க பெற்றது எனது அதிரஷ்டமே. கோவை சாலை போக்குவரத்தை பொறுத்தவரை மக்களுக்கு தேவையான வசதிகளை நாமே செய்து விட வேண்டும், அவர்கள் சுட்டிக்காட்டினால் அதனை உடனடியாக செய்து விட வேண்டும் என்ற கோவை காவல் ஆணையரின் எண்ணமே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல என கூறினார்.

மேலும், கோவை மாநகர பொதுமக்கள் சாலை போக்குவரத்து தொடர்பான தங்கள் ஆலோசனைகளை காவல்துறை கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் 8190000100 மூலம் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க