• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வழக்கு ஆவணங்களைப் பதிவிறக்க CCTS இணையம் அறிமுகம்

March 1, 2017 தண்டோரா குழு

சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்களை ccts என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கோவையில் அறிமுகப்படுத்தினார்.

தமிழக காவல் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பல கால கட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பயன்பாட்டிலும் இருக்கின்றன. அவ்வகையில் “குற்றம் மற்றும் குற்றவாளிகளை இணைக்கும் ccts என்னும் இணையதளம்” 2௦13-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் காணமால் போனவர்கள், அடையாளம் தெரியாத சடலங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றைப் பதிவிறக்கும் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக பெறுவதால் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவர்களது பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கூறி இது குறித்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கில் சாலை விபத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தமிழக காவல் துறையினர் செயல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்கள் ccts இணையதளத்தில் பதிவு செய்யப்படும் திட்டம் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக சம்பந்தபட்டவர்கள் காவல் நிலையம் சென்று அந்த ஆவணங்களை வாங்கத் தேவையில்லை.

அந்த இணையதளத்தில் நேரடியாக ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இத்திட்டத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க