• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

February 6, 2019 தண்டோரா குழு

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கும் போது டாஸ்மாக் நேரத்தை மாற்றி அமைப்பதில் என்ன பயன்? அனைத்து கிராமங்களிலும் கிராம சபைகளை கூட்டி டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றலாமே. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றால், டாஸ்மாக்களில் வாகனம் நிறுத்துமிடம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது? வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது, இனிவரும் தலைமுறையாவது காக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

மேலும், டாஸ்மாக், பார்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவதால் பெரும்பாலான குற்றங்கள் குறையும் என்று வழக்கு விசாரணை பிப்.,28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க