• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு கீதாலட்சுமி ஆஜரானார்

April 12, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு புதன்கிழமை ஆஜரானார்.கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ,எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர்,சரத்குமார்,சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரான நிலையில் கீதாலட்சுமி மட்டும் ஆஜராகவில்லை. வருமான வரித்துறையினர் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையினரின் சம்மனை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனை அடுத்துவருமான வரித்துறை அதிகாரிகள் முன் கீதாலட்சுமி இன்று ஆஜராகினார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க