• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்க புதிய கருவி

July 8, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநில காவல்துறையினருக்கு இறைச்சியை கண்டுபிடிக்கும் புதிய கருவி விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, மத்திய அரசு நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது. மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித உயிர்களை கொள்வது ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று பிரதமர் அறிவித்த பிறகும், மாட்டிறைச்சியை காரணம் காட்டி, மனித உயிர்கள் இரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். பல இடங்களில் திருமணங்களும் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது உண்டு.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் இறைச்சி எந்த இறைச்சி வகை என்று கண்டுபிடிக்கும் கருவியை மகாராஷ்டிரா காவல்துறையினருக்கு வழங்கப்படவுள்ளது.

“இந்த கருவியை கொண்டு,வைத்திருப்பது ஆட்டிறைச்சியா அல்லது மாட்டிறைச்சியா என்று 3௦ நிமிடங்களில் தெரிந்துக் கொள்ளலாம். இந்த கருவி 1௦௦ இறைச்சி மாதிரிகளை சோதனை செய்யும் திறன் பெற்றது. இந்த கருவியின் விலை 8,000 ரூபாய் ஆகும்” என்று ஆய்வக இயக்குனர் கிருஷ்ணா குல்கர்னி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா விலங்கு பாதுகாப்புச் சட்டம் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை செய்துள்ளது. மேலும் அந்த சட்டத்தை மீறி, மாட்டிறைச்சியை விற்பனை செய்தாலோ அல்லது அதை வைத்திருப்பதை கண்டுப்பிடித்தால், அந்த நபருக்கு அபராதத்தை தவிர, 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க