• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடக்கு, மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

June 21, 2023 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார். பின்னர் காந்திஜி சாலையில் ரூ.70.70 லட்சம் மதிப்பீட்டில் 1.17 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் ரூ.166.8 லட்சம் மதிப்பீட்டில் 3.41 கி.மீ. தொலைவிற்கு 6 தார் சாலைப்பணிகள் அமைக்கப்படவுள்ள இடங்களில் சக்தி நகர் பகுதியை பார்வையிட்டார்.பின்னர் 10,11,19,21 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.199 லட்சம் மதிப்பீட்டில் 2.6 கி.மீ. தொலைவிற்கு தார் சாலைப்பணிகள் அமைக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நட்சத்திரா கார்டன் பகுதியில் பில்லூர் குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணியை விரைவாக செய்து முடித்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர்கள் சேகர், மோகனசுந்தரி, செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க