• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லோக்பால் சட்டத்தை மத்திய அரசு தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை – உச்சநீதிமன்றம்

April 27, 2017 தண்டோரா குழு

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நிறை வேற்றப்பட்டு 2014ம் ஆண்டு அமலுக்கு வந்த லோக்பால் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதற்குரிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,

லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை.எதிர்க்கட்சி தலைவர் என்று யாரும் இல்லை என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. தேவையெனில், எந்த கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதோ அந்த கட்சியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து லோக்பால் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் , உறுப்பினர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவருக்கான முக்கிய முன்னுரிமை இடம் இருக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க