• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராதிகாவின் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை

April 11, 2017 தண்டோரா குழு

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் சோதனை நடந்தது. இது தொடர்பாக நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது ராதிகா நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க