• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவ வீரர்களுக்காக தீக்குச்சிகளால் நாடே அஞ்சலி செலுத்தும் வகையில் சிற்பம் வடிவமைத்த கோவை யு.எம்.டி.ராஜா

February 19, 2019 தண்டோரா குழு

தேச பாதுகாப்பிற்கு உயிர் நீத்த ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தும் வகையில் தீக்குச்சிகளால் நாடே அஞ்சலி செலுத்தும் வகையில் யு.எம்.டி.ராஜா என்பவர் சிறப்பம் வடிவமைத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா பல்வேறு வகையான சிற்பங்களை அவ்வப்போது உருவாக்கி வருகிறார்.கடந்த காலங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு, டெங்கு கொசு விழிப்புணர்வு பட்டாசு, ஹெல்மெட் விநாயகர், மெழுகுகள் கொண்டு தேச தலைவர்கள் உருவம், ஜல்லிகட்டை வரவேற்கும் விதமாக சிறிய தங்கத்தினால் ஆன சிறிய சிற்பம், 100 சதவீத வாக்குகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட ஏராளமான சிற்பங்களை செய்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது. உயிரிழந்த வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா 44 தீக்குச்சிகளின் மருந்து பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் திரு உருவமும் அதனை சுற்றி இந்திய இளைஞர்கள் வெள்ளை தீக்குச்சிகளை பதித்து தேச ஒற்றுமைக்கு நாங்கள் உள்ளோம் என்பதை விளக்கும் விதமாக வடிவமைத்து உள்ளார்.

மேலும் படிக்க