• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா அரங்கில் ப்ரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும் எபிக் (EPIQ) ஸ்க்ரீன் துவக்கம்

October 18, 2025 தண்டோரா குழு

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது தென் தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான திரைப்பட அனுபவத்தை வழங்கும்.

மதுரையில் எபிக் திரையரங்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, வழக்கமான திரைப்பட அனுபவத்தை மறுவரையறை செய்யும் பயணத்தை ரேடியன்ஸ் சினிமா இந்த புதிய திரையரங்கின் மூலம் தொடர்கிறது. இந்தத் தொடக்கத்தின் மூலம், இந்தியா முழுவதும் செயல்படும் எபிக் திரைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், கோழிக்கோடு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் வெற்றிகரமான திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

ராஜபாளையத்தில் உள்ள ஆர்-எபிக் வசதி உள்ள அரங்கில் பிரமாண்டமான திரை, ஸ்டேடியம் பாணியிலான இருக்கை அமைப்பு மற்றும் முழுமையான வசதிக்காக வடிவமைக்கப்பட்ட சூழல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரையரங்கம் அதிநவீன பார்க்கோ (Barco 4K RGB Laser) லேசர் புரொஜெக்‌ஷன் , டால்பி அட்மாஸ் (Dolby Atmos) அதிவேக ஒலி அமைப்பு மற்றும் 1.9 ஸ்கிரீன் ஆஸ்பெக்ட் ரேஷியோவைக் (screen aspect ratio) கொண்டுள்ளது. இது துல்லியமான தெளிவு, மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் பிரமிக்க வைக்கும் வண்ணத் துல்லியம் ஆகியவற்றை வழங்குகிறது. பெரிய வடிவ திரையரங்கு ஆர்வலர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கியூப் சினிமா, திரைப்படங்களைச் சிறப்பான EPIQ DCP-களாகவும் தரமுயர்த்தி வழங்குகிறது

இந்த விரிவாக்கம் குறித்து பேசிய கியூப் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி,

“மதுரையில் எபிக்-கிற்கு கிடைத்த அபாரமான வரவேற்பு, மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் பிரீமியம் சினிமா அனுபவத்தைத் தான் விரும்புகிறார்கள் என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது, என்றார்.

” ராஜபாளையத்தில் இந்தப் புதிய திரையரங்கைத் தொடங்குவதன் மூலம், உலகத் தரமான திரைப்பட அனுபவங்களை வெகு தூரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறோம். திரைப்பட ஆர்வலர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் எபிக் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்,” என்று கூறினார்.

ரேடியன்ஸ் சினிமாவின் நிர்வாக இயக்குநர் ராமபிரகாஷ் கூறுகையில்,

“மதுரையின் எபிக் ஒரு திருப்புமுனையாக இருந்தது – பார்வையாளர்கள் அதை மிகுந்த உற்சாகத்தோடும் பெருமையோடும் ஏற்றுக்கொண்டார்கள். ராஜபாளையத்தின் எபிக் அரங்கு மூலம், அதே மாயாஜாலத்தை தீவிர சினிமா ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்.

மேலும் படிக்க