• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்களில் மார்ச் 1-ம் தேதி முதல் முன்பதிவு பயணிகள் பட்டியல் ஒட்டப்படாது – ரயில்வே நிர்வாகம்

February 15, 2018 தண்டோரா குழு

விரைவு ரயில்களில் மார்ச் 1-ம் தேதி முதல் முன்பதிவு பயணிகள் பட்டியல் ஒட்டப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவையும் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல்முறைக்கு மாறும் முயற்சியிலும் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் ஏ1,ஏ மற்றும் பி தரமுள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு பயணிகளின் பட்டியல் ஒட்டப்படாது. அதற்கு பதிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களிலும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க